குடிபோதையில் தீயில் விழுந்து தொழிலாளி பலி

 

ஈரோடு, ஜூன் 10: ஈரோடு, காசிபாளையம், சாஸ்திரி நகர், கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் மாதவன் (68). சென்ட்ரிங் தொழிலாளியான இவருக்கு நீண்ட காலமாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி வேலைக்கு சென்ற மாதவன் மாலையில் குடிபோதையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காசிபாளையம் ஐடிஐ அருகே வந்த போது அங்கு புதர் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருந்தது.

குடிபோதையில் நிலைதடுமாறி தீயில் மாதவன் விழுந்தார். இதில் இடது கால் முழுவதும் தீயில் கருகியது. பின்னர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாதவன் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Related posts

கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு