கீழ்பென்னாத்தூர் அருகே முன்விரோதத்தில் பயங்கரம் மண்வெட்டியால் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை

* தடுக்க முயன்ற தாய், மனைவிக்கும் வெட்டு* அண்ணன், தம்பிக்கு போலீஸ் வலைகீழ்பென்னாத்தூர், மார்ச் 26: கீழ்பென்னாத்தூர் அருகே முன்விரோதத்தில் மண்வெட்டியால் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொல்லப்பட்டார். மேலும் தடுக்க முயன்ற அவரது தாய், மனைவிக்கும் வெட்டு விழுந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி(51), மண்பாண்ட தொழிலாளி. இவருக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் சாந்தி(45) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் வேலுச்சாமி புகார் மனு கொடுத்துள்ளார்.இந்நிலையில், வேலுச்சாமி தனது வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டார். அப்போது, 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்த சாந்தி, ‘என் வீட்டை கண்காணிக்க கேமரா பொருத்துகிறாயா’ எனக்கேட்டு வேலுச்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த வேலுச்சாமி மண்வெட்டியால் சாந்தியை தாக்கி உள்ளார். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த சாந்தியின் மகன்கள் வேடி(23), சந்தோஷ்(22) ஆகியோர் ஓடி வந்து வேலுச்சாமியிடம் இருந்த மண்வெட்டியை பிடுங்கி அவரை சரமாரி வெட்டி உள்ளனர். மேலும் தடுக்க முயன்ற அவரது தாய் நாவம்மாள்(70) மற்றும் மனைவி சுசிலா(45) ஆகியோரையும் சரமாரி வெட்டி உள்ளனர். இதில், வேலுச்சாமி தலையில் பலமாக வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இதனால் வேடி, சந்தோஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.மேலும் வேலுச்சாமியின் தாய் நாவம்மாள், மனைவி சுசீலா ஆகியோர் படுகாயமடைந்தனர். அதேபோல் வேலுச்சாமி மண்வெட்டியால் தாக்கியதில் சாந்தியும் படுகாயமடைந்தார். இதையடுத்து அப்பகுதியில் கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதோடு நாவம்மாள், சுசீலா, சாந்தி ஆகிய மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்து விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் வேலுச்சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் தப்பி சாந்தியின் மகன்கள் வேடி, சந்தோஷ் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்….

Related posts

730 பள்ளி வாகனங்களின் தரம் தணிக்கை * கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு நடத்தினார் * ஜிபிஎஸ் கருவி அவசியம்: அதிக வேகம் இயக்கினால் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டத்தில்

பள்ளி, கல்லூரி வாகனங்களில் கேமராக்கள், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் ஆர்டிஓ உத்தரவு ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு

நெல் கொள்முதல் செய்வதற்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் மறியல் போராட்டம் தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு