கணவனுடன் தகராறில் இளம்பெண் தற்கொலை

தர்மபுரி, மார்ச் 22: தர்மபுரி மாவட்டம், ஏ.சப்பாணிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளியான இவரது மனைவி சித்ரா(32). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணமானது. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும், தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சித்ரா கோபித்துக்கொண்டு, அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை சமாதானப்படுத்தி, மீண்டும் கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சித்ரா நேற்று முன்தினம் மாலை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது