கஞ்சா விற்றவர் சிக்கினார்

 

கோவை, மே 23: கோவை உக்கடம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் கஞ்சா விற்ற கோவையில் தங்கி கூலி வேலை பார்க்கும் தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் பகுதியை சேர்ந்த முத்து தங்கம்(19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்