ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்ற அழைப்பு

 

ஊட்டி8: ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கருவூல அலுவலர் சங்கர நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதை எளிமைப்படுத்த தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அரசு கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் குடிமை ஓய்வூதியர்களின் மனைவி, கணவன் குறித்த விவரங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அணைப்பின் இணைய முகப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது.

எனேவ, இதற்காக பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை தொடர்புடைய கருவூலங்கள் மற்றும் ஓய்வூதிய சங்கங்கள் வாயிலாகப் பெற்றோ அல்லது http://nilgiris.nic.in/ என்ற இணைப்பின் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவங்களை உரிய இணைப்புகளுடன் தொடர்புடைய கருவூலங்களில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விரைந்து அளித்தட வேண்டும். இவ்வாறு மாவட்ட கருவூல அலுவலர் சங்கர நாராயணன் கூறியுள்ளார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்