அரூர், பிப்.23: கம்பைநல்லூர் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட 9வது வார்டில், ₹40.6 லட்சம் மதிப்பில், ஏரியில் கால்வாய் அகலப்படுத்தும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. பேரூராட்சி தலைவர் வடமலை முருகன் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை தலைவர் மதியழகன், பேரூராட்சி உறுப்பினர்கள் சரவணன், சங்கீதா, நந்தினி, ஜீவா, சாந்தி, குமுதா, ரமேஷ், குமார், விஜயலட்சுமி, முருகம்மாள், அஜந்தா, அதிமுலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.