எட்டயபுரம், மார்ச் 9: எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி மன்ற அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஒன்றுகூடி மகளிர் தினவிழாவை கொண்டாடினர். பேரூராட்சி மன்ற தலைவி ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை வகித்தார். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.