ஊட்டி அருகே சூதாடிய 9 பேர் கைது: ரூ.24 ஆயிரம் பறிமுதல்

 

ஊட்டி, மே 31: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புதுமந்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்ஐ ஆரோக்கியநாதன் தலைமையிலான காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிங்கர்போஸ்ட் அருகே கால்ப் மைதானம் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள மறைவான இடத்தில் சிலர் சூதாடி வந்ததை பார்த்து கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், பாலகொலாவை சேர்ந்த பிரேம்குமார் (31) உள்பட 8 பேர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.24 ஆயிரத்து 580 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 9 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Related posts

கலெக்டர் அலுவலகம் முன் ஊதியம் கோரி தர்ணா போராட்டம்

நிலுவை தொகை வழங்க கோரிக்கை

சாத்தூர் அருகே கார் மோதியதில் 3 பேர் படுகாயம்