இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் அளவிடும் பணி செய்யாறு அருகே உக்கல் கிராமத்தில்

செய்யாறு, மார்ச் 28: செய்யாறு அருகே உக்கல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களை அளவிடும் பணி நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு அடுத்த உக்கல் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை கோயிலுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உத்தரவுப்படி கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில் உக்கல் கிராமத்தில் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான வைதீஸ்வரர் கோயிலுக்குச் செந்தமான இடங்கள் 7 ஏக்கர் 98 சென்ட் உள்ளது. இதனை மண்டல இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் கோயில் நிலத்தினை ஆய்வு செய்யும் பணி ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர்கள் திருநாவுக்கரசு, சுப்ரமணியன், ஆய்வர் முத்து சாமி, நில அளவையர்கள் சின்ன ராஜா, சிவக்குமார், அருணாசலம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் அடங்கிய குழுவினர் நேற்று முதல் கட்டமாக சுமார் 3 ஏக்கர் 69 சென்ட் நிலத்தினை நவீன தொழில்நுட்ப (டிஜிபிஎஸ்) கருவியின் மூலம் அளவீடு செய்தனர்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி