ஆயக்குடி பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு உடனே வழங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

பழநி, ஜூன் 5: பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்பு உடனே வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்கி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போதுள்ள மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்க வேண்டிய சூழல் நிலவி அவசியமானதாக உள்ளது.

இந்நிலையில் புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலைக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு