ஆட்டோ கவிழ்ந்து 4பெண்கள் காயம்

ஆறுமுகநேரி, மார்ச் 17:ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் நேற்று காலை ஆட்டோ ஒன்று திருச்செந்தூருக்கு சென்றது.தொடர்ந்து ஆம்னி பஸ்சும் சென்றது. சீனந்தோப்பு விலக்கு அருகே ஆட்டோவை ஆம்னிபஸ் முந்தியபோது பஸ்சின் பின்பக்கம் உரசியதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் வடக்கு ஆத்தூர் சாந்தகுரூஸ்(53), ஆத்தூர் கீழரதவீதியைச் சேர்ந்த 4 பெண்களும் காயமடைந்தனர். அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆட்டோ டிரைவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்