அரூரில் 350 மூட்டை பருத்தி ₹10 லட்சத்திற்கு ஏலம்

அரூர், மார்ச் 19: அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து, விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர். நேற்று நடைபெற்ற ஏலத்தில், விவசாயிகள் 350 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். இதில் ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ₹7,219 முதல் 8,347 ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ₹10 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை