அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த பார்வையற்ற மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

 

அந்தியூர், செப்.12: ஈரோடு அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி ஜோதிபுரம் மீன் காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (60). இவர் நேற்று முன்தினம் இரவு அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள 5 அடி தண்ணீர் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராபர்ட் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்