கிருஷ்ணகிரி, ஏப்.13: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சின்னசெட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(29), கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் மாலை, அணையின் பின் பகுதியில் ேதங்கியிருக்கும் தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில், டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.