காஞ்சிபுரத்தில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் குறை தீர்க்கும் முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில், (10ம்தேதி) இன்று பிற்பகல் 2 மணிக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறவுள்ளது. இம்முகாமில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டாக்டர்களிடம் ரகளை செய்த வாலிபர் ஊழியர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு

அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 2 பேர் தப்பி ஓட்டம்: வேலூரில் பரபரப்பு

மாந்தோப்பில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் 2வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு