மும்பை: மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடர்ந்து, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8000, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு இந்த உதவித்தொகை அரசால் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.