Friday, April 19, 2024
Home » உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Mahaprabhu

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (05.06.2023) தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ரெஃபெக்ஸ் குழுமத்தின் சார்பில் வழங்கப்பட்ட 10,000 மரக்கன்றுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இன்று (05.06.2023) முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அவர்கள் அவரது முகாம் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். சென்னை மாநகரில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலும், மாநகரை பசுமையாக்கி அழகுபடுத்தும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பூங்காக்கள், சாலை மையத்தடுப்புகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் குடியிருப்பு நலச் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்தும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுநாள்வரை 2,84,924 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மேலும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அடையாறு ஆற்றங்கரையில் திரு.வி.க.நகர் பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரையிலும், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரையிலும், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரையிலும், காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரையிலும் கூவம் ஆற்றங்கரையோரம் என மொத்தம் 1,15,756 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi