சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க கார்ப்பரேஷன் தொழிலாளர்கள் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இன்று (25ம் தேதி) நடைபெற உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தலில், தற்போது அங்கீகாரம் பெற்று என்.எல்.சி. ஊழியர்களின் நலனுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தை எண் 3ல் வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர் சங்க தேர்தல் அதிமுகவுக்கு வாக்களிக்க எடப்பாடி வேண்டுகோள்
0