சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது. கல்வி-பண்பாடு-கலாசாரம்-பொருளாதாரம் என பல்வேறு தளங்களில் மகளிரின் தற்சார்பையும்-சுதந்திரத்தையும் உறுதி செய்வதே திராவிட இயக்கத்தின் லட்சியம்.
அதனை, பெரியார்-அண்ணா-கலைஞர் அவர்கள் வழியில், மகளிர் விடியல் பயணம்-புதுமைப்பெண் – கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற மகளிர் நல திட்டங்கள் மூலம் நம் முதல்வர் நிறைவேற்றி வருகிறார்கள். மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம். மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.