Monday, December 11, 2023
Home » வில்லியனூரில் உல்லாச ஆசை காட்டி வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

வில்லியனூரில் உல்லாச ஆசை காட்டி வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

by Lakshmipathi

*இளம்பெண், வாலிபருக்கு வலை

வில்லியனூர் : வில்லியனூர் அருகே உல்லாச ஆசை காட்டி வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். வில்லியனூர் கூடப்பாக்கம் தட்சு பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் பழனி என்கிற கருணாகரன் (50). இவர் கூடப்பாக்கம் மந்தைவெளியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி கடையில் இருந்தபோது, வனிதா (19) என்ற பெண் வீடு வாடகைக்கு கேட்பது போல் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவருடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்துள்ளார். அதன்பிறகு, கடந்த 19ம் தேதி கருணாகரனிடம், ஒருநாள் உங்களுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன்பிறகு இருவரும் கணுவாப்பேட்டை பம்ப்-ஹவுஸ் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஆடைகளை களைந்து நின்றபோது, ஏற்கனவே இருட்டில் மறைந்திருந்த கணுவாப்பேட்டையை சேர்ந்த ராமு, பிரகாஷ், அருண்குமார் ஆகிய மூன்று பேரும் திடீரென டார்ச் லைட் அடித்து, எங்கும் ஓடக்கூடாது என மிரட்டி அந்த கோலத்திலேயே படம் எடுத்துள்ளனர். பிறகு வனிதாவை ஆடைகளை போட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்போதுதான் இவர்கள் திட்டம் போட்டு பணம் பறிக்க அழைத்துவந்தது கருணாகரனுக்கு தெரியவந்தது.

இதனிடையே அந்த கும்பம், கருணாகரனிடம் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன் போட்டோவை இணையதளத்தில் போட்டுவிடுவோம். குடும்பத்திலும் காட்டி அசிங்கப்படுத்துவோம் என மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடமிருந்து இருசக்கர வாகன சாவியை பிடுங்கி, வண்டியில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இன்னும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியதால் உடனே கருணாகரன் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.50 ஆயிரத்தை ஜிபே மூலம் கொடுத்துள்ளார். மேலும் பணம் வேண்டும் என கூறியதால் கருணாகரன் அவரது நண்பர் கடையில் இருந்து ரூ.30 ஆயிரத்தை வாங்கி கொடுத்துள்ளார். மொத்தமாக ரூ.1.25 லட்சத்தை வாங்கி கொண்டு, செல்போனில் எடுத்த புகைப்படங்களை அழித்துவிட்டதாக கூறிவிட்டு சென்றனர்.

இதுகுறித்து கருணாகரன் எஸ்டிஎப் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கணுவாப்பேட்டையை சேர்ந்த ராமு, பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராமு மனைவியின் தோழி வனிதா என்பதும், பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்து.

வனிதாவுக்கு பணம் தேவைப்பட்டதால் ராமு மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து இத்திட்டத்தை போட்டதும், கருணாகரனை கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் அடையாளம் காட்டி இவரிடம் அதிக பணம் உள்ளது என்று கூறி சிக்க வைத்ததும் தெரியவந்தது. மேலும், இவர்கள் ஏற்கனவே மங்கலம் பகுதியில் ஒருவரை ஹோமோசெக்ஸ்க்கு (ஓரின சேர்க்கை) அழைத்து சென்று வீடியோ எடுத்து அவரை மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த வழக்கு மங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராமு, பிரகாஷ் ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வனிதா, அருண்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?