Thursday, May 22, 2025
Home செய்திகள்Showinpage கல்குட்டை தண்ணீரில் மூழ்கடித்து மனைவி, மகனை கொன்றுவிட்டு என்எல்சி ஊழியர் தற்கொலை

கல்குட்டை தண்ணீரில் மூழ்கடித்து மனைவி, மகனை கொன்றுவிட்டு என்எல்சி ஊழியர் தற்கொலை

by Suresh

உளுந்தூர்பேட்டை: கடலூர் மாவட்டம் நெய்வேலி 10வது பிளாக்கை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). இவர் என்எல்சியில் சொசைட்டி ஊழியராக பணியாற்றினார். இவரது மனைவி தேவி (40). இவர்களது மகன் பிரவீன்குமார் (12). இவர்கள் நெய்வேலியில் வசித்து வந்தனர். நேற்றிரவு நெய்வேலியில் இருந்து பைக்கில் மனைவி, மகனுடன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ் நகரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு செல்லவேண்டும் என்று அழைத்து சென்றுள்ளார். இன்று அதிகாலை அஜிஸ் நகர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கல்குட்டையில் தேவி, அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் சடலமாக கிடந்தனர். கல்குட்டையின் அருகில் உள்ள ஒரு மரத்தில் முத்துக்குமார் தூக்கிட்டு இறந்துகிடந்தார்.

அவர் கள் அருகிலேயே பைக் நின்றது. இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து 3 பேரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், மனைவி, மகனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு முத்துக்குமார் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. குடும்ப பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதா வேறு ஏதாவது பிரச்னையா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi