மதுரை: மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுப்பு வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். மனைவியின் பிரசவத்தின்போது விடுப்பு வழங்கவில்லை என தென்காசி கடையம் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்கு தொடர்ந்தார். குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று நீதிபதி விக்டோரியா கௌரி தெரிவித்தார்.