சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தால் தன வரவை உண்டாக்கும். இனிப்பான பிரசாதம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் இன்னும் சிறப்பு.
கன்னி, தனுசு, மீனம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் விநாயகரையோ அல்லது சீரடி சாய்பாபாவை வணங்கி தரிசனம் செய்தால் சிறந்த பலன்களும் தன வரவையும் உண்டாக்கும்.
துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லிங்க ரூபத்தில் உள்ள சிவபெருமானை பச்சை வஸ்திரம் கொடுத்தோ அல்லது பச்சை பயறு படைத்தோ வழிபடுவது சிறந்த பலன்களையும் தனத்தையும் தரும்.