சென்னை: வக்ஃபு சொத்துகளை பதிவு செய்ய ஒன்றிய அரசு இணையதளம் உருவாக்கியது சட்டவிரோதம் என மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். ஒன்றிய அரசு தொடங்கியுள்ள வக்ஃபு உமித் போர்ட்டல் சட்டவிரோதமானது, நீதிமன்ற அவமதிப்பானது. வக்ஃபு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு தற்பொழுது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் வக்ஃபு உமித் போர்ட்டலை ஒன்றிய அரசு ஜூன் 6ல் தொடங்கியுள்ளது. புதிய போர்ட்டலை தொடங்கி வக்ஃபு சொத்துகளின் பதிவை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கை முழுமையாக சட்டவிரோதமானது; இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்பாகும். அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ள சட்டத்தின்கீழ் சொத்து பதிவதை தீர்ப்பு வரும் வரை தவிர்த்திடுக என வலியுறுத்தியுள்ளார்.