மேட்டூர்: ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து நேற்று மாலை 5மணியளவில் 50ஆயிரம் கனஅடியாக இருந்தது. அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவியில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. அதே போல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 48,000 கனஅடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால், அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 58,000 கனஅடியிலிருந்து விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. நேற்று மாலை கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.