புதுக்கோட்டை: மீனவர்கள் அனைவருக்கும் விரைவில் வாக்கி டாக்கி வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண உதவித்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் அறிவுரையின்படி டீசல் மானியத்தையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.