Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற தேஜஸ்வி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு..!!

டெல்லி: வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற தேஜஸ்வி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. 2003ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இது அம்மாநில மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. திருத்தப்பணியின் முதல்கட்டம் முடிந்தநிலையில், தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும் ஆர்.ஜே.டி.தலைவருமான தேஜஸ்வி யாதவ் புகார் தெரிவித்திருந்தார். பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. தன் பெயர் இடம்பெறாததால் சட்டமன்றத் தேர்தலில் எப்படி போட்டியிடுவேன் என்று தேஜஸ்வி கேள்வி எழுப்பினார். எனது பெயர் இடம்பெறாதது ஜனநாயக படுகொலை, வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் செயல். உச்சநீதிமன்ற பரிந்துரை, எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் புறந்தள்ளிவிட்டது என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், நேற்று வெளியிடப்பட்ட பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் தேஜஸ்வி பெயர் உள்ளது. அவர் தனது பழைய EPIC எண்ணை வைத்து தேடியதால் அவரால் தனது பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை , புதிதாக வழங்கப்பட்ட EPIC எண் - RABO456228 மற்றும் சீரியல் எண் 416-ல் தேஜஸ்வி யாதவின் பெயர் இடம்பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.