வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்திநகர் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இது ஒருவர் காயமடைந்துள்ளார். கம்பி குத்தியதாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கி குண்டுகளை அகற்றினர். இது தொடர்பக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிதி வசூலில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Advertisement


