சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் மூலம் வேளாங்கண்ணி சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், வருடாந்திர திருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 2 நாட்கள் வேளாங்கண்ணி சுற்றுலாவை ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 20 மற்றும் செப்டம்பர் 7ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா பயணத்திட்டத்தில் முதல் நாள் இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு பேருந்து சென்னை வந்தடைகிறது. வேளாங்கண்ணி சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக 180042531111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.