Friday, December 1, 2023
Home » வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு

வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு

by Suresh
Published: Last Updated on

நாகை: இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரணயத்தைஅடுத்த வானவன்மகாதேவி கிராமத்திலிருந்து நேற்று சுப்பிரமணியன் மற்றும் செல்வம் என்பவர்களுக்கு சொந்தமான 2 பைபர் படகில் 9 பேர் கோடியக்கரை அருகே அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு அதிவேகமாக வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வானவன்மகாதேவி மீனவர்கள் 9 பேரையும் கத்தி, கட்டை உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

பின்னர் மீனவர்களின் மீன்பிடி வலை, பேட்டரி, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்புடைய மீன்பிடி பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு மீனவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த 9 மீனவர்களும் நகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல்குலும போலீசார் அடையாள தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழிப்பறி மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?