நாகை: இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரணயத்தைஅடுத்த வானவன்மகாதேவி கிராமத்திலிருந்து நேற்று சுப்பிரமணியன் மற்றும் செல்வம் என்பவர்களுக்கு சொந்தமான 2 பைபர் படகில் 9 பேர் கோடியக்கரை அருகே அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அதிவேகமாக வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வானவன்மகாதேவி மீனவர்கள் 9 பேரையும் கத்தி, கட்டை உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
பின்னர் மீனவர்களின் மீன்பிடி வலை, பேட்டரி, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்புடைய மீன்பிடி பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு மீனவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த 9 மீனவர்களும் நகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல்குலும போலீசார் அடையாள தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழிப்பறி மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.