நாகை: வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேதாரண்யம் அருகே வானவன்மகாதேவி கிராமத்தில் இருந்து 4பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நடுகடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தக்குதல் நடத்தினர்.
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்கள் மீனவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றையும் பறித்துச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.