Wednesday, June 25, 2025
Home செய்திகள் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணி தீவிரம்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணி தீவிரம்

by Lakshmipathi

*விரைவில் பயனாளிகளிடம் வழங்கப்படும்

வலங்கைமான் : வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஐம்பது கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்கீழ் நடப்பு நிதி ஆண்டில் 250 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட முன்னதாக நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தட்டுப்பாடு இன்றி சிமெண்ட் மற்றும் கம்பிகள் தமிழக அரசால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் வழங்கப்படு வதால் வீடு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு,. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், அறை, சமையலறை, கழிப்பறை வசதிகளுடன் ரூ.3.50 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றது. முன்னதாக, ஊராட்சி மன்ற தலைவர், உதவிப் பொறியாளர், பணி மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டு பயனாளர் தேர்வு குழு அமைக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதனை அடுத்து பயனாளிகள் தேர்வு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் உதவிப் பொறியாளர், பணி மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஆகியோரை கொண்டு பயனாளர் தேர்வு குழு அமைக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதனை அடுத்து பயனாளிகள் தேர்வு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிச்சமங்கலம் மாணிக்கமங்கலம் அரித்துவாரமங்கலம் வீரமங்கலம் திருவோணமங்கலம் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவ் ஊராட்சிகளில் முதல் கட்டமாக 250 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான நிர்வாக அனுமதி முன்னதாக வழங்கப்பட்டது.

இந்த கட்டுமான பணியினை தடையின்றி விரைவாக செய்திட ஏதுவாக கம்பி மற்றும் சிமெண்ட் ஆகியவை தமிழக அரசால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் தடை இன்றி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் பயனாளிகள் வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க பெரும் உதவியாக இருப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிமற்றும் ஒன்றியபொறியாளர்கள் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் வீடு கட்டும் பணியினைதினசரி நேரடியாக பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi