புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வடகாடு, அதனைச்சுற்றியுள்ள 3 மதுபானக்கடைகளை இன்று மூட புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடகாடு கிராமத்தில் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.