விழுப்புரம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்தனர். கடந்த 2023ம் ஆண்டு வழிபாடு செய்வதில் இரு தரப்பு மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோயில் மூடப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் பாதுகாப்புடன் கோயில் இன்று திறக்கப்பட்டது.