Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படும் மரவள்ளி கழிவுகளால் விபத்து அபாயம்

அரூர் : தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு நன்செய், புன்செய் பயிராக பயிரிடப்படுகிறது. மரவள்ளி கிழங்கிலிருந்து ஸ்டார்ச் எடுக்க ஆத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த மாவிலிருந்து சேமியா, ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது.

பின்னர் கிடைக்கும் கழிவு, காகித ஆலைகளில் பேப்பர் தயாரிப்பிலும், ஜவுளி துறையில் துணிகளுக்கு மொடமொடப்பை கொடுக்கவும், பசை தயாரிப்பிலும், மருத்துவ துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கென சேலம், ஆத்தூர், தர்மபுரி மாவட்ட சேகோ பேக்டரிகளிலிருந்து கிழங்கு கழிவுகள் அரூர் வழியாக லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

இந்த கழிவுகள் லாரிகளில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படுவதால், துர்நாற்றம் வீசுவதுடன், மாவும் வழிநெடுகிலும் கொட்டி கொண்டே செல்வதால் இருசக்கர வானங்களில் செல்வோர் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே, மரவள்ளி கிழங்கு கழிவுகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.