சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள தொலைபேசி இணைப்புகள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் செயலிழந்தது. தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்ததில் தொலைபேசி கேபிள்கள் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துண்டிக்கப்பட்ட செல்போன் வயர்களை பெரியமேடு BSNL ஊழியர்கள் சரி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைபேசி கேபிள்கள் துண்டிப்பால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எந்த புகாரும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.