கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி அதிரடி உத்தரவிட்டுள்ளார். உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பேசியதாக ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் புதுக்கோட்டையில் மணல் லாரிகளில் மணல் கடத்த ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.5000 வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டதாக ஆடியோ வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் : ஐஜி அதிரடி உத்தரவு
0