கீவ்: உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 3வது ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்துள்ளார்.
இந்த நிலையில், 2ம் உலக போரின் 80ம் ஆண்டு தினத்தையொட்டி வரும் மே 8 முதல் 10ம் தேதி வரை தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். போர் நிறுத்தம் மே 8ம் தேதி நள்ளிரவில் இருந்து 10ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.