Tuesday, November 28, 2023
Home » உக்ரைனின் 6 நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 2 பேர் பலி, 21 பேர் காயம்

உக்ரைனின் 6 நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 2 பேர் பலி, 21 பேர் காயம்

by Karthik Yash

கீவ்: உக்ரைனின் சுமார் 6 நகரங்கள் மீது ரஷ்யா நேற்று அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதில் 2 பேர் பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. சர்வதேச அமைதி தினமான நேற்று உக்ரைனின் சுமார் 6 நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெற்கு நகரமான கெர்சனின் குடியிருப்பு கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 5 பேர் காயமடைந்தனர். கீவ் நகரில் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வர்த்தக மைய கட்டிடங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 வயது குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்தனர். கார்கிவில் உள்ள ஸ்லோபிட்ஸ்கை மாவட்டத்தில் 6 ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் இடிந்து சேதமடைந்தது. மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் செர்காசியில் ரஷ்யாவின் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?