Thursday, March 27, 2025
Home » யுஜிசி வரைவு அறிக்கை இலக்கை அடைய உதவாது: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

யுஜிசி வரைவு அறிக்கை இலக்கை அடைய உதவாது: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

by Arun Kumar

சென்னை: யுஜிசி 2024 வரைவு அறிக்கை மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய உதவாது என அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பயிலகங்களின் வளர்ச்சி குறித்து, அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

தற்போது க்யூட் என்ற பெயரில் இளங்கலை பட்டப்படிப்புக்கே நுழைவு தேர்வை மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. யுஜிசி 2024 வரைவு அறிக்கையில், தொழிற்கல்வியிலிருந்து பொதுக்கல்விக்கு அல்லது பொதுக் கல்வியிலிருந்து தொழிற்கல்விக்கு இடம்பெயர்தல் மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய உதவாது. இது முற்றிலும் மாணவர்களின் நலனுக்கு எதிராகவே அமையும். இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் (ஓய்வு), தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் மற்றும் கல்லூரி, பாலிடெக்னிக் முதல்வர்கள் பங்கேற்றனர்.

 

You may also like

Leave a Comment

9 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi