திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மருத்துவமனையில் பெண் நோயாளி மீது ஸ்பிரே அடித்து செயின் பறித்துள்ளனர்.பெல் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்து 5சவரன் செயின் பறித்துள்ளனர். சிகிச்சையில் இருந்த தமிழ்ச்செல்வியிடம் மர்மநபர் கட்டுபோட வேண்டும் எனக்கூறி நகைகளை கேட்டுள்ளார். நகையை தரமறுத்த தமிழ்ச்செல்வி மீது குளுக்கோஸ் ஸ்பிரே அடித்து 5சவரன் தாலி செயினை பறித்து தப்பியோடியுள்ளார்.