Monday, June 23, 2025
Home செய்திகள்குற்றம் திருச்சியில் கடன் தொல்லையால் விபரீத முடிவு; விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று ஜவுளிக்கடை அதிபர், மனைவி தற்கொலை

திருச்சியில் கடன் தொல்லையால் விபரீத முடிவு; விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று ஜவுளிக்கடை அதிபர், மனைவி தற்கொலை

by MuthuKumar

திருச்சி: திருச்சியில் கடன் தொல்லை காரணமாக விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று, ஜவுளிக்கடை அதிபரும், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர். திருச்சி மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (42). இவர் மேலகல்கண்டார்கோட்டை கடைவீதியில் ஜவுளி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி விக்டோரியா (35). ரயில்வே ஊழியரான இவர், பொன்மலை பணிமனையில் வேலை செய்து வந்தார். இவர்களது மகள்கள் ஆராதனா (9), ஆலியா (3). இதில் ஆராதனா 3ம் வகுப்பு படித்து விட்டு 4ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அலெக்ஸ் குடும்பத்தினர் கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. அவர்களை உறவினர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. அப்போது, கணவன், மனைவி இருவருமே போனை எடுக்கவில்லை. இதனால் நேற்று காலை அந்த உறவினர் அலெக்ஸ் வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டு பார்த்தும் எந்த சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் பொன்மலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது ஹாலில் விக்டோரியா உடலும், உள் அறைக்குள் அலெக்ஸ் உடலும் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. அலெக்ஸ் உடலுக்கு, கீழே பாயில் 2 குழந்தைகளும் வாய், மூக்கில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதனை தொடர்ந்து 4 உடல்களையும் கைப்பற்றிய போலீசார் 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘அலெக்ஸ் நடத்தி வந்த ஜவுளி கடையில் நஷ்டம் ஏற்பட்டது. தஞ்சையில் உள்ள அவரது தாய்க்கு புற்றுநோய் இருந்ததால், மருத்துவ செலவுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் தனது தம்பிக்கு தொழில் துவங்க ஜாமீன் போட்டு கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

அவருக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் கட்டவில்ைல. அந்த கடனையும் அலெக்ஸ் கட்டி வந்துள்ளார்.
இதற்கிடையே மகாலட்சுமி நகரில் வங்கி கடன் வாங்கி சொந்த வீடு வாங்கி இருந்ததால் வீட்டு கடன் தவணையை விக்டோரியாவின் தாய்க்கு வந்த பென்ஷன் மூலம் கட்டி வந்தனர். தற்ேபாது பென்ஷன் தொகையும் கிடைக்கவில்லை என தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் ெநருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என்றனர்.

ஒரே புடவையில் தற்கொலை
அலெக்ஸ் அறையிலும், விக்டோரியா ஹாலிலும் தூக்கிட்டுக்கொண்டனர். அப்போது இருவரும் ஒரே சேலையை பாதியாக கிழித்து அதில் தூக்கி மாட்டி தற்கொலை செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi