சென்னை: பேருந்து பயணிகளிடம் சில்லறை கேட்டு நடத்துநர்கள் நிர்பந்திக்க கூடாது என பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. பயணச்சீட்டு பெற சில்லறையுடன் பயணிக்க வேண்டுமென நடந்துநர்கள் வாக்குவாதம் செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பேருந்து பயணிகளிடம் சில்லறை கேட்டு நடத்துநர்கள் நிர்பந்திக்க கூடாது என பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதில்; பேருந்து பயணிகளிடம் சில்லறை கேட்டு நடத்துநர்கள் நிர்பந்திக்க கூடாது.
பயணிகளிடம் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். சில்லறை பெறுவது தொடர்பாக புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் அளிக்கும் பணம், நாணயங்களை பெற்று உரிய மீதத்தொகையை வழங்க வேண்டும். பணிமனைகளில் வழங்கப்படும் முன்தொகையை பயணச்சீட்டு வழங்கும்போது பயன்படுத்திட வேண்டும் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.