பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 24, 26 தேதிகளில் மொத்தமாக 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர் இடையே மற்றும் சென்னை கடற்கரை – எண்ணூர் இடையே மொத்தமாக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.