திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதல்வர், மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ”உங்களைத்தேடி உங்கள்ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.
இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், பிரதி மாதம் ஒவ்வொரு மாதமும் 3வது புதன்கிழமை அன்று ஒருநாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வுசெய்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் பேரில், ”உங்களைத்தேடி உங்கள்ஊரில்” திட்டத்தின் படி மார்ச் மாதத்திற்கான கள ஆய்விற்கு வரும் 19ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.