Sunday, June 15, 2025
Home செய்திகள் விடுமுறை நாளான நேற்று ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

விடுமுறை நாளான நேற்று ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

by Lakshmipathi

ஏலகிரி : ஞாயிறு விடுமுறை நாளான நேற்று ஏலகிரி மலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலையானது கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் 4 மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழலில் அமைந்துள்ளது. ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றும், மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படுகிறது.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று சிறந்த சுற்றுலா தலமாக உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு வந்து செல்கின்றனர். நாளுக்குநாள் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக கடந்த மாதம் ஏலகிரி மலையில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து, ஞாயிறு விடுமுறை நாளான நேற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.தொடர்ந்து, அங்குள்ள படகு இல்லத்தில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

நிலாவூர் பண்டோரா பறவைகள் சரணாலயத்தில் பறவைகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தனர். அங்கு பராமரிக்கப்படும் வெளிநாட்டு பறவைகள், நெருப்புக்கோழிகள், கோழிகள், முயல்கள், அரிய வகை ஓணான்கள், மீன்களை பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi