மதுரை: மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றிய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்துக்கானதுதான். மதுரை, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிப்பு; ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் செலுத்திச் செல்ல அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளை வாகனங்கள் விரைந்து கடந்து செல்வதற்கு மாற்று வழி இல்லையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுங்கச் சாவடிகளை கடந்து செல்ல தாமதமாகிறது: ஐகோர்ட் கிளை
0