சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இப்பதவியில் உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வுபெற வேண்டும், ஆனால் சைலேந்திர பாபுவுக்கு 61 வயதாகிவிட்டது, எனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.