கோவை: 8 அணிகள் பங்கேற்றுள்ள 9வது டிஎன்பிஎல் டி.20 தொடர் கோவையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 7வது லீக் போட்டியில் சேலம்-திருச்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சேலம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 83, சன்னி சந்து 45ரன் அடித்தனர். திருச்சி பவுலிங்கில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட் எடுத்தார்.
பின்னர் களம் இறங்கிய திருச்சி அணியில் ஜெகதீசன் கௌசிக் 62, ராஜ்குமார் 59 ரன் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். 20 ஓவரில் திருச்சி 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களே எடுத்தது. இதனால் 7ரன் வித்தியாசத்தில் சேலம் த்ரில் வெற்றிபெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் முகமது 4 விக்கெட் எடுத்தார். சேலம் வீரர் ஹரி நிஷாந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று இரவு 7.15 மணிக்கு கோவை-மதுரை அணிகள் மோதுகின்றன.