டெல்லி: டெல்லியில் நடைபெற்ற என்.சி.இ.ஆர்.டி கூட்டத்தில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமஸ்கிருதம், இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருவதாக தமிழ்நாடு அரசு கண்டனம். ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை என்பது இந்துத்துவா கொள்கையாக உள்ளது. ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.